சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
தமிழக செய்திகள், அண்மை செய்திகள்

பெரம்பலூரில் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு: அம்மா உணவகம், சார்பதிவாளர் அலுவலகங்களில் கி.சிவக்குமார் திடீர் விசிட்!

19 மே 2026 Admin 24 பார்வைகள்
பெரம்பலூரில் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு: அம்மா உணவகம், சார்பதிவாளர் அலுவலகங்களில் கி.சிவக்குமார் திடீர் விசிட்!

பெரம்பலூர்:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் இன்று (19.05.2026) நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சென்னை மாநகராட்சியில் 383 உணவகங்களும், பிற நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தரமான உணவை தடையின்றி வழங்கவும், இதற்கான செலவினங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

சமையலறை, உணவருந்தும் இடங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு

முதலமைச்சரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பெரம்பலூர் பேருந்து நிலைய அம்மா உணவகத்திற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார், அங்குள்ள சமையற்கூடம், உணவுப் பொருட்கள் வைப்பறை மற்றும் பொதுமக்கள் உணவருந்தும் இடங்களை நேரில் பார்வையிட்டார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: உணவகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், கழிவுநீர் தேங்காத வண்ணம் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அங்குள்ள அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.


சார்பதிவாளர் அலுவலகத்தில் 'லைவ்' செக்கிங் - பொதுமக்களிடம் போனில் விசாரணை!

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர், அங்கு பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பணிகளில் ஏதேனும் காலதாமதம் ஏற்படுகிறதா என்று விசாரித்தார்.

மேலும், நிலுவையில் உள்ள பத்திரப்பதிவு கோப்புகள் குறித்து பொறுப்பு அலுவலர் திருமுருகனிடம் கேட்டறிந்த அவர், பத்திரப்பதிவிற்கு விண்ணப்பித்து காத்திருந்த மனுதாரர்களை நேரடியாக தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார். "உங்களுக்கு எத்தனை நாட்களாகப் பதிவு தாமதமாகிறது? அதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவித்தார்களா?" என்று கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு வீண் அலைக்கழிப்போ, காலதாமதமோ இன்றி உடனுக்குடன் பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரிக்கை

இறுதியாக நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார், அங்கு நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சிப் பொறியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளைப் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாகச் சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

எம்.எல்.ஏ-வின் இந்த அடுத்தடுத்த அதிரடி ஆய்வுகள் பெரம்பலூர் பகுதி அரசு அலுவலகங்களிலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க