சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு
காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டம்
சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ள விவகாரம், இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பிரச்சினையாக நீடித்து வருகிறது. கர்நாடக அரசு சார்பில் குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள இந்த அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசு மற்றும் டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்டாவை பாலையாக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவும், கர்நாடக அரசு மீண்டும் மேகதாது அணைக்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது. அதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதிமுக தலைவர் வைகோ தலைமையில், பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற அறப்போர் ஆர்ப்பாட்டம் நேற்று (ஜூன் 02) காலை நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர். மாவட்ட கழக செயலாளர் ஜெயசீலன் தலைமையில், பெரம்பலூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
