சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
பெரம்பலூர் செய்திகள்

விசிக பெரம்பலூர் மேனாள் மண்டல அமைப்புச் செயலாளரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பெரம்பலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார்!

18 மே 2026 Admin 122 பார்வைகள்
விசிக பெரம்பலூர்  மேனாள் மண்டல அமைப்புச் செயலாளரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பெரம்பலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார்!

பெரம்பலூர்: பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேனாள் மண்டல அமைப்புச் செயலாளர் பெரம்பலூர் இரா.கிட்டு  இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.

அன்பான வரவேற்பும் புத்தகப் பரிசும்

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், இன்று பெரம்பலூரில் உள்ள விசிக மேனாள் மண்டல அமைப்புச் செயலாளர் இரா.கிட்டு இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, இரா.கிட்டு  விசிக தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்  சார்பில் தவெக சட்டமன்ற உறுப்பினருக்குக் கதர் ஆடை அணிவித்து, 'அமைப்பாய்த் திரள்வோம்' என்ற நூலை வழங்கி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விசிக தலைவருக்கு தவெக எம்.எல்.ஏ நன்றி

இந்தச் சந்திப்பின் போது தவெக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தமைக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் விசிக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்றியைத் தலைவரிடம் (தொல்.திருமாவளவன்) கண்டிப்பாகச் சொல்லுங்கள் அண்ணே" என்று இரா.கிட்டுவிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பங்கேற்றோர்

இந்தச் சந்திப்பு நிகழ்வின் போது, மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் அழகேசன், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜன், லாடபுரம் அக்குபஞ்சர் மருத்துவர் பால் நிலவன், விசுவகுடி செல்வராஜ் மற்றும் விசுவகுடி சிலம்பரசன் உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பகிர்க