சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
மாவட்ட செய்திகள், பெரம்பலூர் செய்திகள், அண்மை செய்திகள்

குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா!

03 ஜூன் 2026 Admin 17 பார்வைகள்
குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா!

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நல்லசெல்லியம்மன் ஆகியோருக்கான ஊரணி பொங்கல் மாவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால் குடம் எடுப்பு மற்றும் சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.  
 
இந்த வகையில், குரும்பலூரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு நேற்று (ஜூன் 02) பால்குடம் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை அருள்மிகு ஸ்ரீ நல்லசெல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பொங்கல் மாவிளக்கு பூஜையும், இரவு சுவாமி புறப்பாடு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 

முன்னதாக நேற்று முன்தினம் ஸ்ரீஆலடி முத்துசாமி மற்றும் ஸ்ரீ ஆப்பூர் நல்லேந்திர சுவாமிகளுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.

இந்த ஆன்மிக நிகழ்வுகளில் குரும்பலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ஸ்ரீ மகா மாரியம்மனின் திருவருள் பெற்று சென்றனர்.

 

பகிர்க