மாவட்ட செய்திகள், பெரம்பலூர் செய்திகள்
புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து!
புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்
மரியாதை நிமித்தமான சந்திப்பில் பரஸ்பரம் வாழ்த்து!
பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியரை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மரியாதை நிமித்தம் நேற்று சந்தித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக ஷரண்யா அறி நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார், ஆட்சியர் ஷரண்யாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியருக்கு, சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பூக்கூடை வழங்கினார். தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
