பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ கி.சிவக்குமார் திடீர் ஆய்வு!
பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் இயங்கி வரும் பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலகத்தில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தலைவர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இத்தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக த.வெ.க கி.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார
ஆய்வின் விவரம்:
பொதுமக்களுக்குச் சேவையாற்றும் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் இன்று நேரில் சென்றார்.
அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
உடனிருந்தவர்கள்:
இந்தத் திடீர் ஆய்வின் போது, சார்பதிவாளர் அலுவலகப் பொறுப்பு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
பொதுமக்கள் தங்களின் பத்திரப்பதிவு உள்ளிட்ட தேவைகளுக்குக் காலதாமதமின்றி சேவை பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு அமைந்தது.
